More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!
கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!
Oct 26
கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 'இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7 – 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம் இவ்வாறு மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.



இதன் காரணமாக நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை. டொலரும் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு தகுதிவாய்ந்த எவரும் எமது நாட்டில் அடையாளங் காணப்படவில்லை.



தற்போது லசார்ட் நிறுவனத்திடமே எமது எதிர்கால நற்பெயர் தங்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்தவொரு வேலைத்திட்டத்திற்காகவும் எம்மால் கடன் பெற முடியாது. இது குறிப்பிட்டவொரு அரசியல்வாதியால் தோற்றம் பெற்ற பிரச்சினை அல்ல.



பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக கடன் பெறப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரையறை காணப்படுகிறது. எனினும் அந்த வரையறையையும் மீறி மேலும் மேலும் கடன் பெறப்பட்டுள்ளது.



தனிநபரொருவருக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகமாகக் காணப்பட்டால் அவருக்கு கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும். அந்தக் கடனை மீள செலுத்துவதற்காக அவருக்கு மேலும் கடன் பெற வேண்டியேற்படும்.



இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமையில் 'என் மரணத்திற்கு நானே காரணம்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்.



ஆனால் அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது. அரசாங்கத்தில் யார் தற்கொலை செய்து கொள்வார்? என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு

Jun10

ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச

Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங

Mar25

நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb02

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம

Oct24

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்

Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Aug14

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம

Jan21

வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்

May16

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை

Jan26

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்

Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Jun30

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ