More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் – சிறீதரன்!
இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் – சிறீதரன்!
Oct 25
இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் – சிறீதரன்!

வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.



அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மேலும் தெரிவிக்கையில் போதைவஸ்து தொடர்பாக பொலீஸ், இராணுவம்இகடற்படை ஆகிய மூன்று தரப்பிடமே நாணயக்கயிறு காணப்படுகிறது. போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள் விற்பவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர்.



போதைப் பொருள் வியாபாரிகளை பொலிசார் கைது செய்வதில்லை. பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது என்றால் அதனை தடுக்கின்ற வல்லமை கடற்படையிடம் உள்ளது.



பொலிஸ் இராணுவம் இங்கு குவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.



வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது.



பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து போதைப்பொருள் பாவனை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன் மதகுருமார்கள் மதஸ்தலங்கள் ஊடாக போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.



வடகிழக்கில் உள்ள பெற்றோர், மதகுருமார், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படும்போதே போதைப்பொருள் பாவனையை தடுக்கமுடியும் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Oct04

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்

Mar03

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த

Mar09

சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர

Oct18

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத

May23

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Sep20

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம

Jan22

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா

Mar12

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம

Jan01

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ

Oct07

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய

May29

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம

Feb07

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை