More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!
மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!
Oct 21
மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷியாவை அதிகமாக வெறுப்போம் என்று உக்ரைன் மக்கள் கூறினர். 



கீவ் உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷியா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது. 



உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷியா அழித்துள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்ற ரஷிய தலைமை கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. 



இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானவை. உக்ரைனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மின்சாரம் மற்றும் குளிர்காலத்தை சாமாளிப்பது தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரஷியா தாக்குதல்களை தொடுத்துள்ளது. 



எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷிய படைகளின் தாக்குதல்கள் அதிகமானதால் ஏராளமான உக்ரேனியர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர். 



யுடளழ சுநயன - மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்க இவ்வாறு அவர் பேசினார். ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவது மற்றும் சிறிய அளவிலான மின்சார சேமிப்பு ஆகியவை கூட மின் விநியோக செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும் என்று கீவ் நகர மேஜர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார். 



மின் நிலையங்களை குறிவைத்து ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரேனியர்கள் பதிலடி கொடுத்தனர். 'இது நம் அணுகுமுறையை மாற்றப் போவதில்லை. நாம் அவர்களை அதிகமாக வெறுப்போம். நான் ரஷியாவில் இருப்பதை விட தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் உட்கார விரும்புகிறேன்' என்று உக்ரைனில் வாழும் ஒரு பெண்மணி கூறினார். 



மின்சாதன பொருட்கள் கடை வைத்திருக்கும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில் 'ஜெனரேட்டர்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் முண்டியடித்து வருகின்றனர். இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 



அதை எங்களால் சமாளிக்க முடியும். நம்மால் வாழ முடியாதது என்று எதுவும் இருக்காது' என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற

Jan19

விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த

Apr09

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற

Apr06

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ

May25

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்

Mar01

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Oct14

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்

May12

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத

Apr13

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம

Mar17

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்

Dec29

 ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட

May20

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட

Sep30

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப