அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் அல்லது விவாதங்களைவிட நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்துக்குரியது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படா விட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சுற்றுலா பயணிகளை இங்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் எனவும் இந்தப் பணியை முறையாகத் தொடர்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்;தக்கது.