ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்பரப்பிற்கு அப்பால் இந்திய கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.