More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!
சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!
Oct 14
சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.



நேற்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டது.



வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு, முள்ளாமுனை, பத்தரைக்கட்டை, கன்னங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலேயே இந்த விசேட முற்றுமை முன்னெடுக்கப்பட்டது.



மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் அறிவுறுத்தலின் கீழ் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.



இப்பகுதிகளில் உள்ள ஆறுகளை அண்டியுள்ள காட்டுப்பகுதியிலேயே சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.



இதன்போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் சுமார் 130 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மீட்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் சொந்தப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இதேநேரம் இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் மற்றும் பியர் விற்பனை செய்த 25 வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய

Oct01

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்

May02

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Sep12

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள

Jan13


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம

Oct07

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Mar24

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம

Jul17

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Feb01

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி

Mar04

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Feb12

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர

Nov12

விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ