More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...
கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...
Oct 09
கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்கள் இடம் பெயர்ந்து கடல் வழியாக தமிழகம் வருகின்றனர். இதுவரை 150-க்கும் மேற்பட்ட அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடி அருகே 5-வது மணல் திட்டு பகுதியில் 2 நாட்களாக தவித்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் 5 பேர் மீட்கப்பட்டனர். இதில் கணவன்-மனைவி, அவர்களின் 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.



அவர்கள் கூறும்போது, தங்களுடன் வந்த ஒரு வாலிபர் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் கடலில் குதித்து விட்டதாக தெரிவித்தனர். அவர் என்ன ஆனார்? என்பது குறித்து கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலில் ரோந்து சென்று அவரை தேடினர்.



இந்த நிலையில் கடலில் குதித்து தப்பிய வாலிபர் நேற்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்தார். அவரிடம் மண்டபம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா மற்றும் கடலோர காவல்படை போலீசார்,



மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். எனது பெயர் ஹசன்கான் (வயது 24). எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கி உள்ளனர். நான் கடந்த 2020-ம் ஆண்டு இலங்கைக்கு சென்று அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தேன்.



தற்போது அங்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 5-ந்தேதி இரவு மன்னார் தாழ்வாடி பகுதியில் இருந்து 5 பேருடன் தனுஷ்கோடிக்கு புறப்பட்ட ஒரு பிளாஸ்டி படகில் நானும் அனுமதி பெற்று அவர்களுடன் வந்தேன்.



6-ந்தேதி இலங்கை கடற்படை எங்களை பார்த்து விட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அச்சம் அடைந்த நான் 5-வது மணல் திட்டு பகுதியில் கடலில் குதித்து நீந்தி அன்று மாலை 6 மணிக்கு அரிச்சல்முனை பகுதியில் கரையேறினேன். பின்னர் திருப்புல்லாணி அருேக குத்துக்கல்வலசை பகுதியில் வசித்து வரும் எனது தாத்தா வீட்டுக்கு சென்று விட்டேன்.



என்னை போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் மண்டபம் முகாமுக்கு நானே வந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையான தகவலா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மண்டபம் அகதிகள் முாமில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Jan23

தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந

Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Apr20

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங

Apr26

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து

Sep26

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்

May11

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Feb23

புதுக்கோட்டையில் தேமுதிக

Jun09

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ

Dec31


சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன

Aug25

கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி