More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீனவர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பு!
மீனவர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பு!
Oct 04
மீனவர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பு!

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் அரசினால் பல வகைகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து மகஜர் ஒன்றில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம்பெற்றது.



அகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாடானது

திருகோணமலை கடற் பகுதிகத்ளில் சிறு படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருபவர்களுக்காக மானியத்தொகை ஒன்று, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் மாதாந்தம் 15000 ரூபா வீதம் 3 மாதங்களுகான கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த கொடுப்பனவானது சில காரணங்களின் நிமித்தம் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்பதனை மேற்கோள் காட்டி முன்னெடுக்கப்பட்டது.



குறிப்பாக திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் இயந்திரம் இல்லா படகுகளில் மீன்பிடிப்பவர்கள் பட்டியலில் 1758 மீனவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் 783 மீனவர்களுக்கு மாத்திரமே குறித்த தொகையானது வழங்கப்பட்டிருக்கிறது இதன் காரணமாக பல மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.



அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக குறித்த கோரிக்கைகள் அடங்கிய கையெழுத்திடப்பட்டு மகாஜர் ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிமித்தமாக அனைத்து பகுதிகளை சேர்ந்த மீனவர்களாலும் ஒப்பமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின

Jan25

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு

Mar09

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க

Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

Feb01

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்

Feb03

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின

Sep24

நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட

Jun10

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற

Jun24

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப

May13

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட