More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • டேவிட் மைக்கினன் உள்ளிட்டோரை சந்தித்தார் அலி சப்ரி!
டேவிட் மைக்கினன் உள்ளிட்டோரை சந்தித்தார் அலி சப்ரி!
Oct 02
டேவிட் மைக்கினன் உள்ளிட்டோரை சந்தித்தார் அலி சப்ரி!

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.



இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.



குறிப்பாக இலங்கை குறித்த புதிய தீர்மானது நாட்டின் அரசியலமைப்பினை மீறுவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திரிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் புதிய தீர்மானத்தில் இறுதி உள்ளடக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கேரிக்கை விடுத்துள்ளார்.



அத்துடன் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் அமெரிக்கா, பிரித்தானிய, கனடா உள்ளிட்ட நாடுகளின் கரிசனைகளும் ஒத்துழைப்புக்களும் தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச

Mar13

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்

May01

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்

Apr08

 

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Feb03

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை

Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப

Aug28

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

May27

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு  மட்டும

Aug31

நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs

Apr30

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன

Mar08

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள

Mar14

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட

Oct05

வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த