More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை – சரத் வீரசேகர
தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை – சரத் வீரசேகர
Oct 01
தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை – சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.



அதேவேளை தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல் பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.



இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.



மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.



தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ

Jan21

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில

Dec29

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள

Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

Mar03

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்

Feb12

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட

Feb17

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத

Sep29

சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ

Mar17

நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு

Jan12

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத

Mar13

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ

Jul24

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட

May24

நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது

இந்

Feb15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய

Jan11

கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட