More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தாய் நாட்டை கட்டியெழுப்பும் உறுதி கொண்ட நாளாக அமையட்டும் - சஜித் பிரேமதாச
தாய் நாட்டை கட்டியெழுப்பும் உறுதி கொண்ட நாளாக அமையட்டும் - சஜித் பிரேமதாச
May 03
தாய் நாட்டை கட்டியெழுப்பும் உறுதி கொண்ட நாளாக அமையட்டும் - சஜித் பிரேமதாச

பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியும் கொண்ட நாளாக இந்த ரமழான் பெருநாள் அமையட்டும் என எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.



நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாதகாலம் நோன்பை நோற்று பிறை கண்டதும் கொண்டாடும் பெருநாள் ரமழான் பெருநாள் அல்லது ஈதுல் பித்ர் இன்று கொண்டாடப்படுகிறது.



இறைவன் புனித குர்ஆனை இறைதூதர் முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பட்டது ரமழான் மாதத்திலாகும் என்பதுடன் சமத்துவத்தின் மகத்தான செய்தியும் இந்த ரமழான் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் இறைவனை சிரம்பணிந்து மிகுந்த பக்தியுடன் வணக்கத்தில் ஈடுபடுவர்.



 



ரமழான் நோன்பு காலத்தில் பசித்திருப்பவர்களின் பசியைப் புரிந்து கொள்ளவும், அது பற்றி உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு வாழ்வதற்கும், மனதைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பு இந்த ரமழான் நோன்பாகும்.



இந்த சிறந்த வாழ்க்கை முறைகளை ஒரு மாதம் மட்டும் அல்லாமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாகும். அவர்களின் அர்ப்பணிப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் சுய தியாகம் ஆகியவை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.



 



சமயக் கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் இலங்கைச் சமூகத்தில் ஏனைய இனங்கள் மற்றும் மதங்களுடன் வரலாற்று ரீதியாக புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது பரஸ்பர நட்பு, மனித நேயம், அன்பு ஆகியவற்றால் அவர்கள் நீண்டகாலமாகப் பேணி வரும் நல்வாழ்வின் செய்தி உன்னதமானது, என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று

Jan28

மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட

May18

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந

Jan20

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு

Oct17

யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு

Oct05

மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.

Jun10

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக

Jan23

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

May03

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின

Oct06

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக

Feb08

வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Apr17

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று