More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்பிரதமர்!!!!!
தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்பிரதமர்!!!!!
May 03
தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்பிரதமர்!!!!!

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,



இஸ்லாம் நாட்காட்டியின் மிக முக்கியமான மாதத்தில், உங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வதற்காக உலக வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி ஆன்மீக சடங்கு முறைகளை நிறைவேற்றுவது ஒரு சிறந்த பணியாகும்.





அதற்காக இந்த ரமழான் நோன்பு காலத்தில் நீங்கள் அனைவரும் நற்செயல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விடயமாகும்.



பட்டினியால் வாடும் ஒருவரின் வலியைப் புரிந்து கொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் நீங்கள் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும்.



 



அல் குர்ஆனின் கூற்றுக்கு அமைய ரமழான் நோன்புடன் தொடர்புடைய உன்னத நற்பண்புகளைப் பின்பற்றி அந்த நோன்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த உங்களுக்கு அதன் ஆன்மீக சாரத்தை சமூகமயமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்பது எனது நம்பிக்கை.



முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இத்தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.



 



உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈத்-உல்-ஃபிதர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct08

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ

Jun08

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து

Mar07

20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமைய

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Oct04

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம

Apr07

QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

May31

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க

Feb01

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

May02

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர

Jun10

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச

Oct22

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13