More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
May 02
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 



இந்த நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 





கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.



இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், எங்களை சுடுவதற்காகவா இங்கு வந்தீர்கள், முடியுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என தமது பலத்த எதிர்ப்பினை காட்டி பொலிஸாரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். 





அத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் பொலிஸார் பலர் பாதுகாப்பு கடமைக்காக வந்துள்ளதுடன், தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



23 நாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலானது போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருக்கின்றது.



இந்த நிலையில் பொலிஸாரின் இந்த திடீர் செயற்பாடுகள் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்ப நிலையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 



ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையை அகற்றுமாறே பொலிஸார் போராட்டக்காரர்களிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 



இதேவேளை பொலிஸார் அங்கு பொல்லுகள், தடிகளுடன் களமிறங்கியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்ததுடன், கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் ஒரு தரப்பு பொலிஸார் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், மற்றுமொரு தொகுதியினர் அப்பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 





மேலும், அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் 23ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய

Mar09

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க

Jan26

15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே

Mar04

இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ

Jan29

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய

Oct16

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ

Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Mar09

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Oct18

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி

Jan27

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்

Jan28

குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம