தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று பெரியளவில் வெளியிடப்பட்டுள்ளது, இதில் அப்படக்குழுவினர்கள் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பேசிக்கொண்டு இருக்கும் போது ரகுமான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் பாடலை ரிலீஸ் செய்துவிடுவோம் என கூறியுள்ளார்.
அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.