More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்
பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்
May 01
பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



விசேடமாக கடல் வழியாக இவ்வாறு தப்பி செல்வது இலகுவாக இடம்பெறுவதனால் பல கடல் எல்லைகளில் கடற்படையினர் நீண்ட காலமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





இலங்கை விமானப்படையும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



அண்மைக் காலத்தில் வட மாகாணத்தை சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.



இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர்  விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Sep23

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்

May02

சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ

Jun07

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Feb07

காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்த

Feb07

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60

Sep21

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா

Mar29

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர

Mar15

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

Apr07

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்

Jul16

நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர

Mar15

எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற

Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப