தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அதன்படி தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்த பின் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் மற்றும் நடிகர் ஒன்றாக பணிபுரியவுள்ள வாடிவாசல் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது வாடிவாசல் படத்தை முடித்தபின் சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்படமும் Sci-fi படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் சூர்யாவின் நடிப்பில் ஏழாம் அறிவு, 24 உள்ளிட்ட திரைப்படங்கள் Sci-fi திரைப்படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.