More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்
5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்
Apr 30
5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைக்காலமாக மஞ்சள், கஞ்சா, அபின் என்பவற்றை கடத்தும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கடத்த இருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து இன்று கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு வள்ளத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 





தொடர்ந்து அங்கிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



சுமார் 700 லீட்டர் களைக்கொல்லி பூச்சிமருந்து இருப்பதை கண்ட கியூ பிரிவு பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் வள்ளம் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 





தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடும் நடவடிக்கையினையும் தீவிரப்படுத்தியுள்ளனர். 














வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Feb02

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்

Jun09
Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

Sep26

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி

Jun30
Feb08

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Mar04

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த

Feb04

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய

Apr26

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து

May04

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா

Mar13

சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு