More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பலியானோரின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
பலியானோரின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Apr 27
பலியானோரின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.



அம்பாறை நீதவான் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.



2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார்.



இதன்போது, சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



எனினும், அங்கு இருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த மொஹமது ஹஸ்தூன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் உடற்பாகங்கள் அங்கு காணப்பட்டமை தொடர்பில், DNA பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.



இதனால், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீள தோண்டியெடுத்து பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.



அதற்கமைய, தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து தோண்டியெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா

Sep29

வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை

Mar10

யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Mar14

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை

Jun12

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Oct14

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத

Mar14

அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்

Apr03

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Feb13

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ

Jul02

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண

Sep26

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண