More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!
முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!
Apr 22
முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும்  அரசு நிறைவேற்ற வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைமுறையில் இருக்கும் 4 கிராம சபை கூட்டங்களோடு சேர்த்து முன்னர் உள்ளாட்சி தினமாக இருந்த நவம்பர் 1 மற்றும் தண்ணீர் தினமான மார்ச் 22  என ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் மனதார வரவேற்கிறது. கிராம சபைக்கு தொடர்ந்து உழைத்துவரும் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த வெற்றி இது.



அதோடு 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘‘உத்தமர் காந்தி’’ விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித்தரப்படும் ஆகிய அறிவிப்புகள் கிராம ஊராட்சிகளுக்கு வலு சேர்த்து மக்களுக்கான சேவைகளை அதிகரிக்கச் செய்யும். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவித்துள்ள இந்த அம்சங்கள் நிதிப்பற்றாக்குறை ஏதுமின்றி முழுமையாக செயல்வடிவம் பெறவேண்டும் என மநீம விழைகிறது. அதே சமயம் கிராம ஊராட்சிகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும், கிராம சபைத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.



கிராம ஊராட்சிகளுக்கு அமர்வு படியை அதிகரித்திருப்பது அவசியம் என்பது போல், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கருதுகிறது. இதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக செயல்படும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்கள், துணைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும்  துணை மேயர்களுக்கும் சம்பள நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் செயல்படும் நகர்ப்புற அமைப்புகளில் தமிழகத்தில் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கூடுதலாக, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.கிராமசபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதோடு, உங்கள் உள்ளாட்சிகள் குறித்த கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் விரும்புகிறது. உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ச்சியாக  வலுப்படுத்த மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும்" என்று உறுதிபட தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Sep13

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட

Jun18

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங

Feb24

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே

Nov04

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால்

Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம