More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஆளுநரின் கான்வாய நோக்கி தாக்குதல் - தமிழக டிஜிபிக்கு பறந்த புகார் கடிதம்!
ஆளுநரின் கான்வாய நோக்கி தாக்குதல் - தமிழக டிஜிபிக்கு பறந்த புகார் கடிதம்!
Apr 20
ஆளுநரின் கான்வாய நோக்கி தாக்குதல் - தமிழக டிஜிபிக்கு பறந்த புகார் கடிதம்!

தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபி கடிதம் அனுப்பியுள்ளார்.



மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநரின் வாகனம் சென்றபோது நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ,திராவிடர் விடுதலை கழகம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.  மன்னம்பந்தல் என்ற இடத்தில் சாலையோரம் குழுமியிருந்த போராட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  அப்போது ஆளுநரின் கால்வாய் சென்றபோது காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி கால்வாய் மீது கொடிகள்  மற்றும் கொடி கம்புகளும் வீசப்பட்டது.



இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் இன்றி ஆளுநரின் கால்வாய் கடந்து சென்றுவிட்டது.  ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை விட்டு விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். 



இந்நிலையில் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன்படி அதாவது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி  விஸ்வேஷ் பி.சாஸ்திரி தமிழக  டிஜிபிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.  இதனிடையே ஆளுநருக்கு  எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்

Jul22

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா

Feb23

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Jan03

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி

Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள

Mar06

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு

Jul20

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற

Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Mar27

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Jul26

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து 

கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக