More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்!
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்  காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்!
Apr 20
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்!

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இவர்களில் மூவரின் நிலை கவவைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



நேற்றைய தினம்(19) ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குபட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை, ரம்புக்கனையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்கு அப்பால் செயற்பட்டார்களா என்பதை ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.



விசேட ஊடக அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இந்த குழுவில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.



ரம்புக்கனையில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்ட போதிலும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த

May01

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத

Jul05

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர

May03

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு

Mar07

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த

Jun25

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி

Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

Feb04

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய

Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த

Sep20

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர

Feb06

தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ

Sep16

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு

Oct17

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி

Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று