More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!
கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!
Apr 19
கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை உட்பட மேலும் 11 பேர்காயமடைந்து உள்ளதாகவும் லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார். ரஷியா நான்கு ஏவுகளை தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் மூன்று உக்ரைன் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கியது என்றும், லிவிவ் பிராந்திய பகுதி ஆளுநர் மாக்சியம் கோஸ்ய்ட்ஸ்கேய் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதலுக்காக ரஷியா ராணுவம் பீரங்கிகள் உள்பட தனது பிற திறன்களை அதிகரித்து வருவதாக  அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய போர் பிரிவுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 65ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 



உக்ரைன் மீது ரஷியா கண்மூடித்தனமாக மற்றும் சட்ட விரோதமாக தாக்குதல் நடத்தி வருவதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் மனித உரிமை மீறல்களை உறுதி செய்வதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பணிகளையும் பிற முயற்சிகளையும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஆதரிக்கிறது என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்



கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷியா முழு வீச்சில் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டான்பாஸ் பகுதியில் ரஷிய படைகள் போரை தொடங்கி உள்ளன, அதற்காக அவர்கள் நீண்டகாலமாக தயாராகி இருந்தனர் எனறும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ரஷிய ராணுவத்தின் பெரும் பகுதி அந்த பகுதியில் குவிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப, போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னும் முழுமையாக வரவில்லை என ஐநா சபை மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.  உயர்மட்ட உக்ரைன் மற்றும் ரஷிய அதிகாரிகளை சந்தித்த பின் பேசிய அவர்,  ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



 மூன்று நாள் சண்டைக்குப் பிறகு லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரெமின்னா நகரை ரஷியப் படைகள் கைப்பற்றியதாக அந்த நகரத் தலைவர் கூறி உள்ளார்.



 ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து வலுவாக போரிடுவதற்கு போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள உக்ரைன் அரசு, இதற்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. “தயவு செய்து எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்” என்று பிரசார இணையதளத்தில் தலைப்பிடப்பட்டுள்ளது. 



உக்ரைன் ராணுவம், ரஷிய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெத்சக்கை  2 நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் ரஷ்ய படைகள் தற்போது முற்றுகையிட்டிருக்கும் மரியுபோல் நகரில் உள்ள தனது படைகளையும், பொதுமக்களையும் விடுவிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட

Mar27

ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக

Mar12

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ

Jul31

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar21

உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க

Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

May03

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் ஏற

Sep04

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar12

கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத

Feb28

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட

Mar12

உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ

Mar07

மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்

Apr16

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்