தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளன.
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.