நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் ஜெய் கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியாச் சந்தித்து வருகின்றன. கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெய்
ஜெய் தற்போது அறிமுக இயக்குனர் எஸ்கே வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
தற்போது எண்ணித் துணிக படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெய், சுந்தர் சி உடன் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.