More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
Apr 08
திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை போலீசார் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.



வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாத காலத்தில் செல்போன்கள் திருட்டு மற்றும் தவறவிட்டதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார், செல்போன்களின் ஐஎம்ஏ எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் 3 மாதத்தில் மாயமான 100 செல்போன்களில் 60 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு, செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். 



இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், வழிப்பறி, வீடு புகுந்து திருடும் நிலை மாறி தற்போது இணையவழியில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும், நாளுக்கு நாள் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே இணையவழி மோசடியால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தால் தான் மோசடியில் ஈடுபட்டவரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும் என கூறினார். அவ்வாறு இல்லாவிட்டால் மோசடி நபர் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.



மேலும், இணைய வழி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பி பூபதிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun23

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட

Mar29

புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக

Sep03

வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட

Jan03

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Jun08

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக

Apr24

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Jun06

டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்

Jul26

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட

Apr18

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண

Jun20

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ

Dec31

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்

Mar07

ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக

Apr12

பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந