More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு!
கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு!
Apr 04
கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



மின்துண்டிப்பு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இன்று முதல் பாடசாலை விடுமுறையை வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் முன்னதாக கோரியிருந்தது.



இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, வடக்கு, வடமேல் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையால் 6 முதல் 13 வரையான தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.



இதன்படி மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தவணைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.



ஏனைய மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



அத்துடன் இந்த வாரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்களாயின் அதற்கான அனுமதியை மாகாண கல்வி பணிப்பாளர் ஊடாக அதிபர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



எவ்வாறாயினும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணிக்குழாமினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.



அதேநேரம், இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத

Oct20

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ

Aug29

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட

Jun06

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச

May27

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த

Aug13

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப

May11

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Oct01

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க

Apr11

வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ

Oct08

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய

Jun01

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்

Feb09

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி

Apr02

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன