இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமாக பல நாடுகள் தங்களது மக்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், நாடு தற்போது மீண்டும் வழமை நிலைமைக்கு திரும்புவதால் பல நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனையை தளர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது.
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது.
முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.