உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய நாளின் ஆரம்பத்தில் உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 124 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

எனினும் கச்சா எண்ணெய் பரல் விலை படிப்படியாகக் குறைந்து நேற்று மாலை சந்தை நிலவரத்தின் பிரகாரம் 120 டொலர்கள் அளவில் காணப்பட்டது.
கடந்த மார்ச் 08ம் திகதிக்கு பிறகு தற்போதுதான் எரிபொருள் விலை அதி உச்சத்தில் இருப்பதாகவும் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.