இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றான தமிழகத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீர்த்த கடலில் தம்பதியினர் பிணமாக மிதந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தமிழகத்தின் கோவை மாவட்டம், பொன்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் 62 வயது நிறைந்த கோவிந்தராஜ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மகன் உயிரிழந்ததால் மன விரக்தியில் இருந்து வந்த அந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந்துள்ளனர்.