More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர்
இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர்
May 18
இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர்

நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை நம்ப தயாராக இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.



இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.



ரஷ்ய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பு வேண்டி தாங்கள் நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன.



ஆனால் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது.



இந்நிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நாடுகளுக்கு துருக்கி எப்போதும் ஒப்புதல் தராது என அந்த நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது,



நோட்டோ விண்ணப்பம் தொடர்பாக தங்களை நம்ப வைப்பதற்காக ஸ்வீடிஷ் மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் தலைநகர் அங்காராவிற்கு வந்து தேவையில்லாமல் எங்களை சோர்வடைய வைக்கக்கூடாது.



இந்த இருநாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்பு குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை இல்லாத போது எவ்வாறு அவர்களை நம்புவது? ஸ்வீடனை ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு. அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருக்கின்றனர்.



இவ்வாறு துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar01

உக்ரைன் -  ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ

May16

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா

Jan13

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி

Feb28

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட

Apr26

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்

Mar03

 புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண

Apr23

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ

May10

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக 

Mar04

ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்

Mar03

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம

Aug22

காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள

Sep09