More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்
காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்
May 11
காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



திருகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில் உள்ள கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென குறித்த ஊடகத்தின் உள்ளக பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.



மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் Pillow House மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.





நேவி ஹவுஸ் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் Pillow House மாளிகை காட்டில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன.



Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மஹிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.





திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ராஜபக்ச அணியினர் இரண்டு உலங்கு வானூர்திகளில் கட்டுநாயக்காவிற்கு வருவதாக கூறி மக்களை குழப்பியுள்ளனர். இதனால் கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை திசைதிருப்பிவிட்டு மகிந்த உள்ளிட்ட குழுவினர் இந்த மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷவின் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகின்றது.





மகிந்த இந்திய உலங்கு வானூர்தியில் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், சமுத்ரா என்ற கப்பலில் இந்தியாவுக்கு அவரை அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறி மக்களை திசை திருப்பியுள்ளனர்.



இதற்கிடையில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட நாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் என குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மகிந்தவை காப்பாற்றும் திட்டங்களாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி

Sep06

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம

Sep26

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட

Oct21

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்

Jul22

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம

Jun01

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட

Feb04

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (

Feb08

மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

Feb02

எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Aug15

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன

Mar02

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர