நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்த படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் தற்போது இதே ஜோடி மீண்டும் ஒரு படத்திற்காக ஜோடி சேர இருக்கிறது.
அஹ்மத் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் - ஜெயம்ரவி ஜோடி நடிக்க இருக்கிறது. அடுத்த மாதம் தொடங்கும் படம் பற்றி பேசிய இயக்குனர் 'இது ஜெயம் ரவி கெரியரில் இதுவரை நடிக்காத வித்யாசமான ரோலாக இருக்கும்' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஒரு அழகிய காதல் கதை இருக்கும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முதலில் ஷூட்டிங்கை சென்னையில் தொடங்கி, அதன் பின் புதுச்சேரியில் சில பகுதிகள் எடுக்க இருக்கிறோம். அதன் பிறகு ஸ்பெயின் பால்கேரியா போன்ற நாடுகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்த இருக்கிறோம் என்றும் அவர் கூறி உள்ளார்.