உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் கங்கா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத நிலையில் உக்ரைனிய பெண்ணைத் திருமணம் செய்த இந்தியர் ஒருவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பிரிந்து வருவது குறித்த தனது கவலையை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறி தற்போது வீவில் உள்ள நண்பருடன் தங்கியிருக்கும் ககன் என்ற கணவர், “நான் ஓர் இந்தியக் குடிமகன். என்னால் இந்தியாவுக்குச் செல்ல முடியும். இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
என் மனைவி 8 மாதம் கர்ப்பிணி. போலந்துக்குச் செல்கிறார். என்னால் குடும்பத்தை விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் தற்போது வீவில் உள்ள நண்பருடைய வீட்டில் தங்கியுள்ளோம்,” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.