பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
காப்பான் படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் இதுவே ஆகும்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக நடிகர் சூர்யா ரூ. 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.