More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா! தொடரும் தாக்குதல்கள்
நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா! தொடரும் தாக்குதல்கள்
Mar 06
நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா! தொடரும் தாக்குதல்கள்

போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதாகவும், நான்கு லட்சம் பேர் ரஷ்ய படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் உக்ரைனின் மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை தீவிரகட்டத்தை அடைந்துள்ளது.



இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.



எனினும், போர் நிறுத்தத்தை ரஷ்ய படைகள் மீறுவதாகவும், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு பாதை அமைப்பது மறுக்கப் படுவதாகவும் மரியுபோல் நகர மேயர் வாடிம் பாய்சென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.



அந்த நகரம் முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நான்கு லட்சம் நகரவாசிகள் ரஷ்ய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும், தி கீவ் இன்டிபென்டன்ட் நாளிதழுக்கு மேயர் அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.



இதேவேளை, மரியுபோல் நகர் மீது போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக பொதுமக்களை வெளியேற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்தநிலையில், தாக்குதல் நடவடிக்கைகளை மாஸ்கோ மீண்டும் தொடங்கி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May16

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ

Aug07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar18

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது

Feb25

1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ

Oct07

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக

Mar10

உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான

Apr16

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா

Feb05

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்

May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Mar29

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று

May24

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங

Mar06

உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து

Mar24

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி

Mar27

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம

Jun06

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும