More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தூக்கத்தில் இருந்த தம்பியை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்.
தூக்கத்தில் இருந்த  தம்பியை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்.
Mar 06
தூக்கத்தில் இருந்த தம்பியை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்.

வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி கூலித்தொழிலாளியான இவருக்கு முகிலா என்ற மனைவியும்,லிங்கேஸ்வரன் மற்றும் தேவபிரகாஷ் என இரு மகன்கள் உள்ளனர்.



மூத்த மகனான லிங்கேஸ்வரன் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவரது தம்பி தேவபிரகாஷ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.



இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் தேவபிரகாஷ் தனது தாயார் முகிலாவிடம் தகராறு செய்துள்ளார். இதை தட்டி கேட்ட அண்ணன் லிங்கேஸ்வரனுக்கும் அவரது தம்பி தேவபிரகாஷ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இதையடுத்து தூங்கி கொண்டிருந்த தனது தம்பி தேவபிரகாஷை அண்ணன் லிங்கேஸ்வரனை கத்தியால் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதில் தேவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுகுறித்து வாலாஜாபாத் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் வாலாஜாபாத் போலீசார் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தேவபிரகாஷ்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவரான அண்ணன் லிங்கேஸ்வரன் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.



கொலைச் செய்யப்பட்ட தேவபிரகாஷ் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் , மதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் இவர் குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Apr12

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Jun29

இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க

Oct13

தி.மு.க. தலைவ

Feb12

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்

Apr19

நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற

Jul17

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப

Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த

Jan17

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும

Jun10

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த

Mar08

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Aug18

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி