More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : ஏழு பேர் கைது.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : ஏழு பேர் கைது.
Mar 06
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : ஏழு பேர் கைது.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டனர்.



தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, கஞ்சா போன்றவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.



இதனைத் தடுக்க கடலோர காவல் குழும பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனிப்படை பொலிஸார் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.



இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்திக் கொண்டு செல்ல முயன்ற சுமார் 450 கிலோகிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேசன் (49), முருகேசன் மகன் மாரிகுமார் (32), சிதம்பரத்தைச் சேர்ந்த ஜஹாங்கிர் பாதுஷா மகன் மன்சூர் அலி (37), தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பன்னீர்செல்வம் (42), தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலோன் காலனி கந்தசாமி மகன் யோகேஸ்வரன் (41), லூர்தம்மாள் புரம் முருகன் மகன் இசக்கி முத்து (40), மேல அழகாபுரி பெருமாள் மகன் வினீத் (25) ஆகிய 7பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 9 கைப்பேசி, மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

Mar12

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

Jan25

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி

May28

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தம

Mar12

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி

May30

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு

Apr05

மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம

Jan19

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம

May27

தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்

Feb24

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள

Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல

Mar04

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த