ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் உயிரிழந்த நிலையில், ஷேன் வார்னே மரணத்தில் அவரின் 3 நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்துள்ளன.
ஷேன் வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தான் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது, வார்னே இரவு உணவிற்கு வராததால் அவரை தேடிச்சென்ற நண்பர்கள், அங்கு எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வார்னே கிடந்ததை கண்டுள்ளனர்.
இதனையடுத்து வார்னேவுக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்து அது பலனளிக்காததால்,ஆம்புலன்ஸை அழைத்ததாக நண்பர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வெளியான அடாப்சி ரிப்போர்ட்டிலும் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
எனினும் இந்த மரணத்தில் பொலிசாருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இதனையடுத்து மருத்துவ ரிப்போர்ட்களை கணக்கில் எடுக்காமல் இன்று அந்த 3 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்போவதாக தாய்லாந்து காவல் துறை அறிவித்துள்ளது.