More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!
Mar 05
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!

 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டிருந்த தகவல் ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.



உக்ரைன் மீது ரஷியா இன்று 10வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், கெர்சன் நகரை கைப்பற்றி ரஷிய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடம்பெறும் துப்பாக்கி சூட்டில் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.



அதேவேளை, மீட்பு பணிக்காக உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பது தொடர்பாக ரஷியாவின் திட்டங்கள் எப்போது ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற தகவல் ரகசிய ஆவணங்கள் மூலம் கசிந்துள்ளது.



அதன்படி உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கான திட்டங்கள் ஜனவரி 18 அன்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 ந்தேதி வரை 15 நாட்களுக்குள் உக்ரைனை பிடிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் ரகசிய போர் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.



உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் உக்ரைனில், ரஷியா இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்வைத்தும், ரஷியாவின் போர் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனக்கூறியும் உக்ரைன் சார்பில் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இதற்கிடையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, ரஷியாவை கடுமையாக விமர்சித்து, ரஷியா தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.



அதாவது ரஷியா துருப்புக்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரங்களில் வசிக்கும் பெண்களிடம் அத்துமீறி பலாத்காரம் செய்வதாக அவர் பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,



நாட்டில் உள்ள நகரங்களில் குண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகிறது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் ரஷிய ராணுவ வீரர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பல புகார்கள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் அனைவரும் நீதித்துறையின் முன் நிறுத்தப்படுவார்கள். தாய்நாட்டை காக்க எங்களை விட பலமாக உள்ளவர்களிடம் மோதி வருகிறோம். சர்வதேச சட்டம் எங்கள் பக்கம் தான் உள்ளது. இது எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு

May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Jan11

அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Mar15

உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர

Apr23

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய

Sep20

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Mar10

போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்

Jun26

இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை

May24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்

Mar26

அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ

Mar28

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந

May23

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ

May26

உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந