கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்டில் கடத்த முயன்றதால் காதல் ஜோடி கூச்சல் போட்டதை கண்டு சக வாகன ஓட்டிகள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் மற்றும் சினேகா. இவர்கள் இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் மேஜர் என்பதால் குடும்பத்தினர் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெண் வீட்டார் சமரசமாகி விட்டதாக கூறி கோவிலுக்கு செல்லலாம் என கூறி ஏமாற்றி தங்களை எங்கோ கடத்தி செல்வதாகவும், தங்களை பெற்றோர் கொன்று விடுவார்கள் எனவும் கதறினர்.