உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (03-03-2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அதிபர் ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, "உங்களால் உக்ரைனுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு விமானங்களை கொடுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாதிடிமிர் புடினுடன் (Vladimir Putin) நேரடியாக உரையாடுவது மட்டுமே போரை தடுப்பதற்கான ஒரே வழி எனவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்கும் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.