More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?
போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?
Mar 03
போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதேவேளை, ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத்தளத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



இந்நிலையில், அடுத்த பதிலடி எப்படி இருக்கும் என்பதில் கண்டிப்பாக ரஷ்ய அதிபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மரண அடி உறுதி எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



போர் தொடங்கிய முதல் 7 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கா போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் மரியுபோல் நகரங்களை ரஷ்ய துருப்புக்கள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளன. மட்டுமின்றி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது.



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய முதல் 7 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கா தனது போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை, தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் மரியுபோல் நகரங்களை ரஷ்யப் படைகள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளன. அதுமட்டுமின்றி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது.



மேலும், மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றிவிடலாம் என களமிறங்கிய ரஷ்யப் படைகள் தொடர்ந்து 8வது நாளாக கடுமையாக போராடி வருகிறது. இதனிடையே, முன்னாள் குத்துச்சண்டை வீரரும் கீவ் நகர மேயருமான Vitali Klitschko தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



ரஷ்ய தாக்குதலுக்கு இதுவரை உக்ரைனில் 21 சிறார்கள்  பலியாகியுள்ளதாகவும், 55 சிறார்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Mar05

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Feb18

கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி

Mar05

புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Feb24

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

Feb27

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்

Mar14

ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ