உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று கூட பார்க்காமல் இந்திய மாணவிகளையும் தாக்குகிறார்கள் என்று இளைஞர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது உக்ரைனில் இருந்து மீட்டு ரஷ்யாவுக்கு கொண்டு சென்று விடுங்கள் என தமிழ் மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ் மாணவர் ஒருவர் அங்கு சிக்கிக் கொண்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,
கார்கீவ் நகரில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இந்திய மாணவர்கள் சிலர் வெளியே போய் உள்ளார்கள். போன இடத்தில் பாம் வெடித்து கர்நாடகாவை சேர்ந்த ஒரு மாணவர் இறந்துள்ளார்.
எங்களுக்கு இதுவரை எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது ரயில் மூலம் வெளியேறலாம் என்றாலும் கூட அதிலும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
நாங்கள் இருக்கும் இடமான கார்கீவ் நகரில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு கூட பாதுகாப்பு இல்லை.அப்படியே ரயில்வே ஸ்டேஷன் சென்றாலும் ரயிலில் ஏறுவதற்கு காசு கேட்கிறார்கள்,
உக்ரைன் நாட்டு குடிமக்களை மட்டும்தான் இலவசமாக அனுப்புகிறார்கள். அதுமட்டுமின்றி குண்டுவெடிப்பில் ரயில் தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயிலில் செல்வது பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.