More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
Apr 01
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முயன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.



இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.



இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.



இதன்போது எரிபொருளிற்காகக் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால் தான் நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலைமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல், கொலைகாரரிற்கு முழுமையாகக் கேட்கிறதா, அடிக்க முடியாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



இதன்போது சம்பவத்தைச் செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு, மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.



இதன்போது மக்கள் "இவர்களால் வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை, மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்குப் பிரயோசனம் இல்லாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர் என தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

Mar16

இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க

Jan25

இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட

Mar23

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்

May29

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்

Mar02

எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற

Jun06

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து

Mar03

2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர ச

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Oct03

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ

Jan25

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப

Oct22

சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு

Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

Jan25

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,

Apr08

கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு