More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை
அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை
Mar 29
அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை

ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.



வியாழன் அன்று வடகொரியா இந்த ஆண்டில் 12வது முறையாக ஆயுத சோதனைகளை நடத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட, நீண்ட தூர Hwasong-17 ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.



பிரம்மாண்ட ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதலை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் வழக்கம் போல் கின் ஜாங் உன் அதனை கண்டுகொள்ளவில்லை.ஏவுகணை நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 15,000 கிமீ (9,320 மைல்கள்) வரை பறக்க முடியும்.



மேலும் அமெரிக்காவின் நிலப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 25 மீ (82 அடி) நீளம் கொண்டதாக கூறப்படும் நிலையில், Hwasong-17 உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பாக உள்ளது.



வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்



இந்நிலையில் தான் ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். இதேபோல் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கடந்த வாரம் வாசோங் - 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும் என்றார். ஒருவராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுதங்கள் திறன்கள், அமோகமான ராணுவ பலம் இருந்தால்தான், போரைத் தடுக்க முடியும், நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.



ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கிம், வட கொரியா இன்னும் "சக்தி வாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை" உருவாக்கும் என்றும், தனது நாடு "அணு ஆயுதப் போரைத் தடுப்பதை இன்னும் தீவிரமாகச் செய்யும்" என்று அவர் கூறியதாக KCNA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வ

Mar10

உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள

Feb05

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி

Sep15

 ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா

Aug02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Mar12

உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ

Mar20

துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி

Sep03

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Oct01

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ

Sep14

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்

Mar05

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ

Jan27

விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்

Aug28

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க

Mar18

உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்