More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு
உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு
Mar 28
உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு மீட்டது.



இந்த மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.



இந்த நிலையில் உக்ரைன் பல்கலைக்கழகத்தில் இருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.



கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



ரஷியா மற்றும் கிரிமியாவில் உள்ள நிறுவனங்கள் உக்ரைனில் இருந்த வெளிநாட்டு மருத்துவ ஆர்வலர்களையும், இந்தியாவை தளமாக கொண்ட ஆலோசகர்களையும் அணுகி தங்களது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கும் பணியை தொடங்கியுள்ளன.



கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, பெலாரஸ், போலந்து ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே இதே மாதிரி இடமாற்றத்திற்கான உதவிகளை அளித்துள்ளன.



மீட்பு நடவடிக்கையின் போது 140 இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு பதிலாக மால்டோவா சென்று சிசினாவில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகோலே டெஸ்டெமிடனு ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆப் மெடிசின் அண்ட் பார்மசியில் (எஸ்.யூ.எம்.பி.) நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.



இது தொடர்பாக அந்த கல்வி நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதி டாக்டர் கொர்னேலியா ருடோஸ் கூறியதாவது:-



கடந்த வாரம் வரை உக்ரைனில் இருந்து 140 இந்தியர்கள் நேரடியாக வந்தனர். அவர்களை எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளோம்.



நட்பின் அடையாளமாக இந்த செமஸ்டருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்.



செப்டம்பர் முதல் கட்டணத்தை மட்டுமே தொடங்குவோம். எங்களிடம் அதிக வசதிகள் இருக்கிறது. முதல், இரண்டாம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களை ஒரே ஆண்டிற்கு அழைத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இதனால் நேரம் இழப்பு ஏற்படாது.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோன

Mar29

எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு

May04

உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச

Jul06

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக

Aug26

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்

Feb28

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி

Mar08

உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர

May22

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,

Mar14

ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு

Feb23

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித

May20

டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக

Mar25

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற

Mar05

 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா

Jan20

தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ

Mar06

பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை