More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது
Mar 28
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான விமானங்கள் தொடர்பாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தெமியா அபேவிக்ரமவால் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் அனுமதியுடன் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இது தொடர்பில் தெமியா அபேவிக்ரம கூறுகையில்,



இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த போதிலும், இது உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.



இந்த கட்டுப்பாடு காரணமாக சில விமான இயக்குனர்கள் தங்கள் பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் திட்டமிடப்படாத தங்கும் இடங்களை வழங்க வேண்டியிருந்தது. இதனால் இயக்குனர்களுக்கு கூடுதல் செலவாகும்.



இதேவேளை தடை நீக்கப்பட்டாலும், விமானிகள் மற்றும் விமான இயக்குனர்கள் மாலைநேரம் மற்றும் அதிகாலைக்கு இடையில் செயற்படும் போது இரவு நேர பறத்தலுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52

Jan13


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல

Jul27

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந

Jan19

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

Jul14

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ

Apr27

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா

Feb23

தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Feb04

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ

Jun08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர

Jul14

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்

Mar29

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட

Sep21

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி

Feb01

டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு