More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!
வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!
Mar 26
வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!

உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தற்காக வடகொரியா நாட்டின் நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.



அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.



இருப்பினும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற நோக்கிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் நோக்கிலும் வட கொரியா அடிக்கடி ஏவுகணைகளை வருகிறது. இது தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.



இந்த நிலையில், ‘ஹவாசங்-17’ (Hwasong-15,) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. அந்த ஏவுகணை அதிகபட்சமாக 6,248 கி.மீ. உயரம் வரை பறந்து 1,090 கி.மீ. தொலைவைக் கடந்து கடலில் விழுந்ததாக வட கொரியாவின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஏவுகணையானது அதிநவீனத்துவம் கொண்டதாக அறியப்படுகிறது. அதன் மூலமாக அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் வட கொரியாவால் தாக்க முடியும்.



வட கொரியாவின் அணு ஆயுதத் திறனை உலகுக்கு எடுத்துரைக்கவே ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.



அமெரிக்காவின் கூடுதல் தடைகள்:



வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்டு ஆஸ்டின், ஜப்பான், தென் கொரியா நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா். 3 நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அவா்கள் உறுதியேற்றனா்.



வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய 5 நிறுவனங்கள், தனிநபா்கள் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்தது.



2022-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மட்டும் வட கொரியா 12 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Mar08

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர

Jul10

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க

May21

புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக

Jun17

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம

Apr09

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Mar31

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

Nov08

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங

Mar21

 உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

Jun28

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Jan28

போலாந்தில்  கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில

Mar14

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத