More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்
இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்
Mar 14
இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இவை இரண்டின் பதவிக்காலமும் முடிந்து விட்டன.



கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முடிவடைந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அவர், அவற்றின் பதவிக்காலத்தை நீடித்தார்.



எனினும் அரசாங்கம் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.



எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதால், 9 மாகாண சபைகளில் வடக்கு, கிழக்கு, மேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் தோல்வியடையும் வாய்ப்புகள் உள்ளன.



இதன் காரணமாகவே அரசாங்கம் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், 330 உள்ளூராட்சி சபைகளில் 180 முதல் 190 வரையான சபைகளை கைப்பற்ற முடியும் என அரசாங்கம் நம்புவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனடிப்படையில், அரசாங்கத்திற்கு சாதகமான அமையும் வகையில் தேர்தல் முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமி்டுள்ளதாக தெரியவருகிறது.



உள்ளூராட்சி சபை ஒன்றை கைப்பற்ற வேண்டுமாயின் 50 வீதமான உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும் என்ற வரையறையை 35 வீதமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

Feb02

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய

Jan21

வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்

Feb10

பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர

May21

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன

Oct02

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப

Oct14

யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ

Jan24

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,

Mar07

தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

May02

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ

May20

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை

Jan27

கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண

Feb08

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும