More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
Mar 14
சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.



2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவை 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில், பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது மெட்ரோ நிறுவனம்.



இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது.



இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன.



இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் எனவும்,



விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனவும் மெட்ரோ நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து, இவ்விரண்டு நிறுத்தங்களிலும் இன்று காலை 7:00 மணி முதல் ரயில்கள் நின்று செல்கின்றன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug10

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா

Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர

Mar24

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ

Aug21
Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Sep22

மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ

Jan25
Jan20

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி

Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

May20

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க

Jun23